சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் 24.11.2020 செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10.45 மணிக்கு சென்னையில் நிவர் புயல் தொடர்மழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். முதற்கட்டமாக, எழும்பூர் மாண்டியத் சாலை சென்று அங்கு தேங்கியுள்ள மழை நீர் அகற்றி போக்குவரத்து சீர் செய்யும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.