தமிழகம் மற்றும்புதுவையில் டிசம்பர் 4 முதல் ஆறாம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

Advertisment

WEATHER

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகரும் நிலையில்வரும் டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய தொடங்கும்.

Advertisment

நான்காம் தேதியைபொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பகுதிகளில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளது.

கனமழை பொருத்தவரையில், டிசம்பர் 4-ஆம் தேதி கடலோரம் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும்,டிசம்பர் 5ஆம் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும்கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் டிசம்பர் 4 5 6 ஆகிய தேதிகளில் ஒரு சில முறை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.