Advertisment

தொடர் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்! (படங்கள்)

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுக்க பலத்த மழை பெய்துவருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகளும் நிறைந்துள்ளன. அதீத மழைப் பொழிவால், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி இரவு முதல் சென்னையில் பெய்த பெருமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது.

Advertisment

அதன்பிறகு தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மின் மோட்டார் உதவியுடன் தேங்கிய மழை நீரை அகற்றிவருகின்றனர். இருந்தபோதிலும் சென்னையில் நேற்று (10.11.2021) மாலைமுதல் பெய்துவரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் அதிக அளவில்தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை அறிஞர் அண்ணா நகர், புழல், சைக்கிள் ஷாப் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisment

chennai rains chennai floods
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe