சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "தமிழகம் மற்றும் புதுவையில் 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் முடிந்து விடும். தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை 2% அதிகம் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி 64%, ராமநாதபுரம் 45%, நெல்லை 45%, தூத்துக்குடியில் 31% மழை பதிவாகியுள்ளது. அதேபோல் குறைந்த பட்சமாக மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 24% பருவமழை பெய்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16% குறைவாக பெய்துள்ளது. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய இல்லை; வறண்ட வானிலையே நிலவும்." இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.