Skip to main content

சேலத்தில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது மழை! மக்கள் மகிழ்ச்சி!!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

சேலத்தில் இன்று இரவு ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்! தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்துப்போனது. எனினும், பரவலாக சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்து இருந்தது. 

 

இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் பண்டிகை, ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஏற்கனவே அம்மனுக்கு கம்பம் நடுதல் விழா முடிந்த நிலையில், இன்று இரவு கோட்டை மாரியம்மன் மற்றும் மாவட்டம் முழுவதும் இதர அம்மன் கோயில்களிலும் பூச்சாட்டுதல் நடந்தது. பூச்சாட்டுதல் விழாவின்போது சேலத்தில் கண்டிப்பாக மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 23, 2019) காலை முதலே சேலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து, மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 

 

 Rain in Salem for an hour People are happy

 


இரவு 7 மணியளவில் லேசாக தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. அடுத்த பத்து நிமிடத்தில் மழையின் வேகம் அதிகரித்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம், கருவாட்டுப்பாலம், மேட்டுத்தெரு, நாராயணநகர், அம்மாபேட்டை, பெரமனூர், பள்ளப்பட்டி, நெடுஞ்சாலை நகர், ஜான்சன்பேட்டை, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது.

 


மாநகரின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாலும், கழிவு நீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாலும் மழைநீர் வடிவதற்கு நீண்ட நேரமானது. சுகவனேஸ்வரர் கோயில் அருகே, மேட்டுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் அடைபட்டு இருந்ததால், மழைநீர் சாலையிலேயே தேங்கி இருந்தது. இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார்சைக்கிள்களின் இன்ஜின் பகுதி வரை மழைநீர் தேங்கியது. 

 

 Rain in Salem for an hour People are happy

 


இரவு எட்டு மணியளவில் மழையின் வேகம் குறைந்தது. என்றாலும், லேசான தூறல் மழை பெய்து கொண்டிருந்தது. சேலத்தில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று பெய்த திடீர் மழையால் மக்களும், அம்மன் பூச்சாட்டுதலன்று எதிர்பார்த்தது போலவே மழை பெய்ததால் பக்தர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரவும் குளிர்ந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.