Skip to main content

மணப்பாறையில் மழை பாதிப்பு

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

1_4.jpg

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

 

மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (06.11.2021) இரவு விடிய விடிய 68.6 மிமீ அளவில் கனமழை பெய்து தீர்த்தது. நகர பகுதிகளில் போதிய வடிகால் நீர்வழி பாதைகள் இல்லாததால் மணப்பாறை பேருந்து நிலையம், முத்தன் தெரு, புதுத்தெரு, ராஜீவ் நகர், எம்.ஜி.ஆர். நகர் அத்திக்குளம், வாகைக்குளம், சிதம்பரத்தான்பட்டி ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் முனியப்பன் சுவாமி குளத்தில் குளம் நிரம்பியதால் கரையைப் பாதுக்காக்கும் பொருட்டு நீர் வெளியேறும் வகையில் கால்வாய்களில் நீர் செல்ல நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு கரிக்கான்குளம் தெரு, முனியப்ப சுவாமி நகர், மஸ்தான் தெரு, வண்டிப்பேட்டைத்தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடிவருகிறது. 

2_2.jpg

 

அதேபோல், சோலைப்பட்டி – பாட்னாப்பட்டி இடையே சீகம்பட்டி சோலைகுளம் நிரம்பி வெளியேறிய வெள்ளம் சாலை போக்குவரத்தைத் துண்டித்தும், வீடுகளில் புகுந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது. வடிகால் பாதை தூர்வாராமல் இருந்ததால் வெள்ள நீர், அருகில் சம்பா பயிட்டிருந்த விளை நிலத்திற்குள் புகுந்து நடப்பட்ட நாத்துகள் நீரில் மூழ்கின. அதேபோல், சித்தாநத்தம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. சீகம்பட்டி அய்யாக்கண்ணு – வள்ளியம்மை வீட்டின் சுவர் ஒருபகுதி இடிந்து விழுந்தது. திருமலையான்பட்டி அழகர்சாமி மகன் சின்னழகன் வளர்த்த 5 வயது மதிக்கத்தக்க பசுமாடு இடி தாக்கியதில் இறந்தது. மழை, வெள்ள பாதிப்புகளையும், விளைநில பாதிப்புகளையும் வருவாய்த்துறையினர் தணிக்கை செய்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Chance of rain in 5 districts

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 9.35 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.