பெரம்பலூரில் புறப்பட்ட அரசுப்பேருந்து அரியலூர் அருகே சென்று கொண்டிருக்கும் நேரத்தில் மழை பொழிந்ததால், பேருந்தின்உள் பகுதியில் மழை நீர் கொட்டியது. இதில் பேருந்தில் பயணித்த அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அந்த பேருந்தில் பயணித்தவர்களில் ஒரு பெண் மட்டும் குடை வைத்திருந்ததால் குடை பிடித்தவாறு பயணித்தார். இந்த காட்சிகள் இணையங்களில் வைரலாகப் பரவி வருகிறது. முந்தைய காலங்களிலும் இதுபோன்று அரசுப் பேருந்துகளில் மழை நேரங்களில் பேருந்தின் உள் பகுதியில் மழைநீர் புகுந்து பயணிகள் அவதியடையும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.