தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27/11/2021) கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, பட்டாளம் பகுதியில் வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிடத்துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

Advertisment

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.