/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/union_6.jpg)
கனமழை பாதிப்பு, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட உடனடியாக தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக மத்தியக் குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு தமிழ்நாட்டிற்கு வருகிறது. வேளாண், நிதி, ஜல்சக்தி, எரிசக்தி, சாலைப்போக்குவரத்து, ஊரக வளர்ச்சித்துறையைச் சேர்ந்தவர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மழை பாதிப்புகளைப் பார்வையிட்டு கணக்கீடு செய்யும் மத்தியக் குழு, ஒரு வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கும். அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும். பின்னர், தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)