Advertisment

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை

rain came in 23 district tamilnadu

கடந்தசில தினங்களாகத்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Advertisment

மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

weather rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe