17 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்; வெளியான விடுமுறை அறிவிப்பு

Rain alert for 17 districts; Notice of holiday issued

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று காலை 10 மணி வரை சுமார் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அறிவிப்பின்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் மட்டும் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவியா தண்ணீரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

weather
இதையும் படியுங்கள்
Subscribe