Rain alert for 10 districts

Advertisment

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி இரவு 7 மணி வரை தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைக்கும்வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.