Advertisment

ஜில்லுனு ஒரு அறிவிப்பு; 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை!

 Rain in 6 districts in 3 hours

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

நேற்று ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்த நிலையில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் 20 கிலோ மீட்டரில் இருந்து 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் இந்த மிதமான மழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுபுறம் வெயிலின் தாக்கம் அடுத்தஇரண்டு நாட்களுக்கு அதிகமாகத்தான் இருக்கும் எனவும், வெப்ப அலை இரண்டு நாட்களுக்கு தொடரும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu weather summer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe