Skip to main content

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

Rain in 4 districts in Tamil Nadu in next three 3 hours

 

தமிழகத்தில் அடுத்த மூன்று 3 நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாகத் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு வேளைகளில் சென்னையில் மழை பொழிந்து வருகிறது. தற்போது சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. 

 

சென்னையில் அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடியக் கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்