Skip to main content

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 18 மாவட்டங்களில் மழை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Rain in 18 districts in Tamil Nadu within next 3 hours

 

தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்யும் என்றும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்