Rain in 15 districts in next 3 hours

Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையத்தின் அறிவிப்பின்படி அடுத்த மூன்று மணி நேரத்தில்தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.