Skip to main content

மழையால் தவிக்கும் வேலூர் மாவட்டம்

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

 


தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல இடங்களில் மிதமாக பெய்து வந்த மழை தற்போது கனமழையாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 16ந்தேதி மாலை வேலூர் மாவட்டத்தில் மழை தொடங்கியது. அப்போது தொடங்கிய மழை ஆகஸ்ட் 17ந்தேதி காலை 8 மணி வரை கொட்டி தீர்த்தது.

 

r


சுமார் 12 மணி நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 107 மி.மீட்டர் அளவு பெய்துள்ளது. வேலூர் மாநகரத்தில் மட்டும் 165 மி.மீட்டர் மழை பெய்துள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்த மழையால் இன்று ஆகஸ்ட் 17ந்தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

 

r


அதோடு, ஆசியாவின் பிரபலமான மருத்துவமனையான சி.எம்.பி மழை நீரால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் பல கல்லூரிகளும், பள்ளிகளுக்குள் மழை நீர் புகுந்து 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

 

r

 

தனியார் நிர்வாகங்கள், மின் மோட்டார்களை கொண்டு வந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றன. அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி கல்லூரிகள் அதனையும் செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.

 

r


பாலாற்றங்கரை ஒரம் குடியிருக்கும் பலரும் மழை நீர் புகுந்து மக்கள் பெரிதும் துன்பப்பட்டு வருகின்றனர். அதோடு, காலையில் இருந்து தற்போது வரை மழை பெய்து வருவதால் வேலூர் மாவட்டம் தவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வேலூர் மாநகரம் தவிக்கிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.