Advertisment

மத்திய அரசை கண்டித்து ரயில்வே தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!!

Railway workers' union protests against central government

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஆக்ட் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணி வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கவேண்டிய கருணைத்தொகை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை 1மாதத்திற்குள் வழங்க வேண்டும்.

Advertisment

மேலும் தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளையும், பதக்கங்களையும் குவித்த வீரர்கள் பயிற்சி பெற்ற திருச்சி உள்ளிட்ட 15 ரயில்வே விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் முடிவால் எதிர்காலங்களில் மைதானங்களில் பணம்கொடுத்து பயிற்சிபெறும் நிலை ஏற்படும் என்பதனைக் கண்டித்தும்.

Advertisment

ஏழாவது ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்பகுதி ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது பணிமனை கோட்டத் தலைவர் பால்ரெக்ஸ் தலைமையில் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் நின்று மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest workers railway trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe