Skip to main content

பாமக அன்புமணி பொய்யாக அறிக்கை விடுகிறார்...திமுக எம்.பி அண்ணாதுரை பேட்டி!!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

திருவண்ணாமலை நாடாளமன்ற உறுப்பினரான சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலை ரயில்வே நிலையத்துக்கு ஆய்வுக்கு வந்த கோட்ட பொறியாளர் மற்றும் அதிகாரிகளை வரவேற்றார். அவர்களோடு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். பயணிகள் மழை, வெயில் காலங்களில் பாதுகாப்பாக நிற்க மேற்கூரை அமைப்பது, பயணிகள் தங்க கூடுதல் கட்டிடங்கள் கட்டுவது, முக்கிய பிரமுகர்கள் தங்க கட்டிடம் ஏற்படுத்துவது என செய்ய வேண்டும் என வேண்டுக்கோள் வைத்தார்.
 

railway station inspection


அதோடு, இப்பகுதி மக்கள், வியாபாரிகளின் நீண்ட கால கோரிக்கையான அதிவேக ரயில்கள் திருவண்ணாமலையில் நின்று செல்ல வேண்டும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இரயில்கள் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை அதிகாரிகளிடம் கூறினார்.  

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியவர், தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரும் ரயிலை திருவண்ணாமலைக்கும், சென்னை பீச் முதல் வேலூர் கண்டோன்மெண்ட் வரை ரயிலை திருவண்ணாமலை வரை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன், திருவண்ணாமலை வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும், ரயில் நிலையத்தில் கூடுதலான கழிவறைகளை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன் என்றார்.

திருவண்ணாமலை - திண்டிவனம் இரயில்பாதை திட்டம் ரத்து எனச்சொல்லப்படுகிறதே என கேள்வி எழுப்பியபோது, பாமகவை சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணிராமதாஸ், பொய்யான தகவல்களை அறிக்கையாக தந்துள்ளார். அப்படியொரு எண்ணம்மே இரயில்வே வாரியத்துக்குயில்லை. அப்படியொரு கடிதம் வரவில்லை. அவர் பொய்யான தகவலை அறிக்கையாக தர அதை பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. அந்த திட்டம் தொய்வாக இருப்பது உண்மை தான். அதற்கு காரணம் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யாதது தான். ரயில் பாதை அமைப்பதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்த ஆண்டு இந்த திட்டத்துக்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வைப்பேன் என்றார்.


அதேபோல் திருவண்ணாமலை - திண்டிவனம் இரயில் பாதை திட்டம் என்பது சரியானது தான், ஆனால் இது முழுமையான திட்டமல்ல. திருவண்ணாமலையில் இருந்து ஜோலார்பேட்டை வரையிலான பாதை திட்டம் நடைமுறைக்கு வந்தால் தான் அது முழுமை பெறும் என்றார்.

கடந்த மாதம் திண்டிவனம் - திருவண்ணாமலை, பழனி - ஈரோடு, சென்னை - கடலூர் போன்ற 5 ரயில்வே திட்டங்களை ரத்து செய்யச்சொல்லி ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. இந்த திட்டங்களால் மக்கள் பயன்பெறுவார்கள், இந்த பகுதி வளர்ச்சி பெறும் அதனால் ரத்து செய்யக்கூடாது என பாமக அன்புமணிராமதாஸ் அறிக்கை விடுத்துயிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அது பொய்யான அறிக்கை என திமுக எம்.பி சாடியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.