மத்திய அரசின் நிதி ஆயோக் அறிவிப்பின்படி, 151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களைத் தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்திவருகின்றனர். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ரயில்வே துறை தனியார் மயமாக மாற்றப்படுவதைக் கண்டித்து டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தினர் நேற்று முன் தினம் (09.07.2020) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.