Advertisment

கரோனாவை வென்று பணிக்குத் திரும்பிய ரயிவே பாதுகாப்புப் படை வீரர்கள்! (படங்கள்)

Advertisment

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ள நிலையில் 49,587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமின்றி கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவலர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பொதுப்பணியின் போது தொற்று ஏற்பட்டு மீண்டு பணிக்குத் திரும்புவோருக்கு அந்தந்த துறை சார்பில் வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்துகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்றுமுன் தினம் சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பினர். அவர்களை வரவேற்கும் விதமாக தென்னக ரயில்வே பாதுகாப்புத் துறை ஐ.ஜி பிரேந்திரகுமார் பூக்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

Chennai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe