காலி பணியிடங்களை நிரப்பக்கோரி ரயில்நிலைய
அதிகாரிகள் போராட்டம்
ரயில்வேயில் காலியாக உள்ள நிலைய அதிகாரிகள், கூடுதல் ரயில் நிலைய அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில்நிலைய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்றுபோராட்டம் நடத்தினர்.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்நிலைய வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர்சத்தியநாராயணன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினர்களாக சங்கத்தின் மண்டல பொதுச் செயலாளர் முரளி,அகில இந்திய ரயில்வே ஓடும் தொழிலாளர்கள் சங்க கோட்டச் செயலாளர் பாலசந்திரன் உட்பட பலர் பேசினர். முடிவில் சங்ககோட்டச் செயலாளர் சேதுமாதவன் நன்றி தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)