Skip to main content

மின் பாதையாக மாற்ற மரங்களை வெட்டும் ரயில்வே நிர்வாகம்... இயற்கை ஆர்வலர்கள் வேதனை!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

இந்திய ரயில்வே மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், கார்பன்-டை ஆக்ஸைடை தடுக்கும் விதத்தில், பசுமையைப் போற்றும் வகையிலும், சுற்றுசூழலை பாதுகாக்கவும், ரயில் பாதைகள் அனைத்திலும் 100 சதவீதத்திற்கு மின் பாதையாக மாற்றும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 


இதனால் ரயில் பயணிகளுக்கு துரித சேவைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக கடலூர் துறைமுகத்தில் இருந்து திருவாரூர் வரை 114 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. இதன் பணிகள் முடிந்து கடந்த இரு நாட்களுக்கு முன் இந்த மின்தடத்தில் மின் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் இந்த தடத்தில் விரைவில் மின்சார ரயில் இயக்கபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் உள்ளிட்ட ரயில் பயணிகள் வரவேற்றுள்ளனர்.

 Railway Administration for Cutting Trees Nature enthusiasts suffer!

இந்தநிலையில் பசுமையை காக்கவும், புகையில்லா சுற்றுச்சூழலை பாதுகாக்ககூடிய வகையில் மின்மயமாக மாறி வரும் ரயில்வே துறை, மின்பாதையாக மாற்றப்படும் ரயில் பாதைகளுக்கு சற்று தொலைவில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பசுமை மரங்களை வெட்டி வருகின்றனர். இதனால் பசுமை பாதுகாக்கப்படுகிறதா? மரங்களை வெட்டிவிட்டு எப்படி காற்றை சுத்தப்படுத்த முடியும் என்று இயற்கை ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். சமீபத்தில் மின் பாதையாக மாற்றப்பட்டுள்ள திருவாரூர்- கடலூர் வரை உள்ள ரயில் பாதைகளில் இருந்த பழமை வாய்ந்த மரங்களை  ரயில்வே நிர்வாகம் வெட்டியுள்ளதால் இயற்கை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

 

இதுகுறித்து இயற்கை ஆர்வலரும், டைமிங்க் கெல்ப் தொண்டு நிறுவனத்தின் தலைவருமான வினோத்குமார் கூறுகையில், "ரயில்வே நிர்வாகம் ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன் மூன்று மரக்கன்றுகளை நட்டுவிட்டு மரங்களை வெட்டியிருக்க வேண்டும். அவர்கள் செய்தது தவறான நடவடிக்கை. ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிவிட்டு இவர்கள் எப்படி சுற்றுசூழலை பாதுகாப்பார்கள் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்க வேண்டும். எனவே ரயில்வே நிர்வாகம் மரம் வெட்டுவதற்கு டெண்டர் விட்டு வெட்டியதை போல ரயில் பாதைகளுக்கு இடையூறு இல்லா இடங்களில் அதிகளவில் புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்."  


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.