ADVERTISEMENT

வேலூரில் மீண்டும் ரெய்டு...

08:39 AM May 07, 2019 | kalaimohan

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இரண்டு நகை கடைகளில் நள்ளிரவு வரை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வாணியம்பாடியில் எல் எஸ் கே ஜுவல்லரி, ஆர்த்தி ஜுவல்லரி ஆகிய நகைக்கடைகளுக்கு மூன்று கார்களில் வந்த அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வருமான வரித்துறை சோதனையானது நள்ளிரவு வரை நீடித்தது. அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள செந்தில் ஜுவல்லரி அந்த கடையின் உரிமையாளர் செந்தில் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT