Skip to main content

பிகில் படம் ஓடும் தியேட்டரில் சார் ஆட்சியர் ரெய்டு...

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

வேலூர் மாவட்டம், சோளிங்கரில் இயங்கிவரும் சுமதி திரையரங்கத்தில், நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணத்தை விட பார்வையாளர்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்துக்கு புகார் சென்றது. அந்த புகாரின் அடிப்படையில் சோளிங்கர் சென்ற இளம்பகவத், திரையரங்கில் அக்டோபர் 27ந்தேதி ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்  சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் யுவராஜ், சோளிங்கர் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோருடன் உடனிருந்தனர். 

 

raid in vellore sumathi theatre

 

 

தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட  கட்டணத்தின்படி,  ஏசி வசதியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூபாய் 120 ம், மாநகராட்சி, நகராட்சிப், பேரூராட்சி பகுதிகளில் பகுதிகளில் தியேட்டர்களில் ரூபாய். 100 ம் , ஊராட்சிப் பகுதிகளில் ரூபாய் 75/- மட்டுமே, வரிகள் தவிர்த்து, அதிகபட்சமாக டிக்கெட் கட்டணமாக வசூல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் பொழுது அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் திரையரங்குகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

அந்த சுற்றறிக்கையையும் மீறி திரையரங்குகளில் பிகில், கைதி படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. அப்படி வந்த ஒரு புகாரையடுத்து ஆய்வுக்கு சென்று திரைப்படம் பார்த்தவர்களிடம் விசாரித்தபோது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான ரூபாய் 80  விட  கூடுதலாக, முதல் வகுப்பிற்கு 150 ரூபாயும், பால்கனி 200 ரூபாயும் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அதிகமாக வசூல் செய்த தொகை  ரூ. 33,830/- ஐ திரைப்படம் பார்த்த 589 பார்வையாளர்களுக்கு திரும்ப வழங்க சார் ஆட்சியர் உத்தரவிட்டார். திரைப்படம் முடிந்து வெளியே வந்த பார்வையாளர்களுக்கு கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகையை தியேட்டர் நிர்வாகம் திரும்ப வழங்கியது.

இதுப்பற்றி சார் ஆட்சியர் இளம்பகவத் பேசுகையில், அரசு உத்தரவை மீறி திரையரங்க நிர்வாகம் கட்டணம் வசூலித்துள்ளது. இதுப்பற்றிய அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.