செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வான செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியன் என்பவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமாக மூர்த்திபாளையத்தில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனத்திலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனைக்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.