Skip to main content

கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான 57 இடங்களில் சோதனை

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

Raid at KP Anbazhgan house

 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான 57 இடங்களில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

 

இன்று விடியற்காலை 3 மணியில் இருந்து தர்மபுரி மாவட்டம், காரியமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் உள்ள கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. கே.பி. அன்பழகனுக்கு நெருக்கமான பொன்னுவேல், நகரப்பகுதி அனசாகரம் பகுதியில் உள்ள தர்மபுரி அதிமுக நகரச் செயலாளர் பூக்கடை ரவி, இலக்கியம்பட்டி பகுதியிலுள்ள பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, கே.பி. அன்பழகனின் சித்தப்பா வீடு, பாலக்கோடு மாரண்டஅள்ளி, பொங்களூர், சென்னை நுங்கம்பாக்கம் என மொத்தம் 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், கே.பி. அன்பழகன் வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Former Minister K.P. Anbazagan appears in court

 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு இருவருக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆட்சியிலிருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீதும், இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தர்மபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக 10000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தர்மபுரி நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், தனபால் உள்ளிட்ட 11 ஆஜரானார்கள். இதனையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

 

Next Story

சி.விஜயபாஸ்கர் மீது புகார்; குற்றப்பத்திரிகை தாக்கல்! 

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Complaint against C. Vijayabaskar; 10,000 page charge sheet filed!

 

அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்ததையொட்டி பெரும்பாலான அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. 

 

இதில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடியும், முன்னாள் உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ரூ.11.32 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

Complaint against C. Vijayabaskar; 10,000 page charge sheet filed!

 

இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை, தர்மபுரி மாவட்ட நீதிமன்றங்களில் அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அன்பழகன் மீதான குற்றப்பத்திரிகை 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டதாக இருந்தது. சி.விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை 216 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. இதைத் தொடர்ந்து இனி அடுத்தடுத்த அமைச்சர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.