Skip to main content

தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் திடீர் சோதனை!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

DMK , ADMK LEADERS HOMES RAID FLYIND SQUAD TEAM

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பணிகளில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பல சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவினர் ஒரு வாக்காளருக்கு ஆயிரம் ரூபாயும், சில சட்டமன்றத் தொகுதிகளில் ஐநூறு ரூபாயும் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் விராலிமலை, ஒரத்தநாடு போன்ற முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் ரூபாய் 2000 வரை வழங்கி வருவதாகக் கூறுகிறார்கள். மேலும், திமுக வேட்பாளர்கள் சராசரியாக தலா ரூபாய் 500 வரை கொடுப்பதாக தகவல் கூறுகின்றனர். 

 

நேற்று (02/04/2021) கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாமலை பகுதியில், அதிமுகவினர் பணத்துடன் கூடிய கவர்களை வழங்குவதாக வந்த தகவலையடுத்து, பறக்கும் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்களைப் பார்த்த அதிமுகவினர் கவர்களைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அந்தக் கவர்களைக் கைப்பற்றிப் பார்த்தபோது, ஒவ்வொரு கவரிலும் ரூ.1000, 2000, 3000 என மொத்தம் ரூபாய் 41,000 வரை இருந்துள்ளதைப் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

DMK , ADMK LEADERS HOMES RAID FLYIND SQUAD TEAM

 

இதேபோல மாவட்டம் முழுவதும் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல்கள் வர, மாவட்ட அதிகாரிகளின் உத்தரவில், இன்று (03/04/2021) காலை திருமயம் தொகுதியில் உள்ள வி.கோட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராமதிலகம் (திமுக) வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை செய்துள்ளனர். அதேபோல, ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தரப்பில் இருந்து நேற்று (02/04/2021) இரவு அரயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் பணம் வாங்கிச் சென்றதாக அவர்களின் பெயர் மற்றும் முகவரி அடங்கிய பட்டியல் கிடைத்ததால், அந்த ஏழு பேர் வீடுகளிலும் ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான காவல்துறையினரின் பாதுகாப்புடன் பறக்கும் படை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இருப்பினும் யார் வீட்டிலும் பணம் சிக்கவில்லை. இதேபோல தொடர்ந்து சோதனைகள் நடந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது