Advertisment

தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஏர் கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பு!

 ப

Advertisment

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் வருகின்ற 6 -ஆம் தேதி முதல் வேல் யாத்திரை நடக்க இருப்பதாக, தமிழக பா.ஜ.க அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர் பாஜகவினர்.

இந்நிலையில் 'ஏர்கலப்பை யாத்திரை' நடத்த இருப்பதாக, தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சில தினங்களுக்கு முன்பு அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துபேசுகையில், காங்கிரஸ் சார்பில் நாட்டின் வளர்ச்சி, விவசாயிகள் மேம்பாட்டுக்காக, 'ஏர் கலப்பை யாத்திரை' விரைவில் நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் இந்த பேரணியில் ராகுல்காந்தி கலந்து கொள்வார் என்று இன்று அவர் தெரிவித்துள்ளார். பாஜக நடத்தவுள்ள வேல் யாத்திரையில் 6 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe