Skip to main content

''தமிழகம் இந்தியாவுக்குள் தானே இருக்கிறது!'' - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

Rahul gandhi in karur

 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் 23 ந் தேதி முதல், மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று கரூர் வருகை புரிந்த ராகுல்காந்திக்கு சின்னதாராபுரம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களிடம் ராகுல்காந்தி  உரையாற்றினார். அப்போது அவர்,

 

"தமிழகத்தைப் பற்றி இன்னும் நான் புரிந்துகொள்ள விரும்புகிறேன். இதற்காகவே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான திருக்குறளை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். தமிழகத்தின் ஆன்மா என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. நம்பிக்கை, சுயமரியாதை தமிழக மக்களுக்குப் புதிதல்ல. இது மொழியிலும் கலாச்சாரத்திலும் வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி இதை மதிப்பதே இல்லை. இந்த திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி பிரித்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இந்தப் புத்தகத்தை மட்டும் படித்திருந்தால் தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு பற்றி புரிந்திருப்பார். தமிழர்களின் உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ள இதை விட வேறு வழி இல்லை.

 

Rahul gandhi in karur election campaign

 

அன்பைச் செலுத்தினால் தமிழக மக்கள் இருமடங்காக திருப்பிச் செலுத்துவார்கள். ஆனால் பிரதமர் மோடியோ 'ஒரே தேசம்', ஒரே கலாச்சாரம்', 'ஒரே வரலாறு' எனச் சொல்லி மக்களை அவமதிக்கிறார். தமிழக மக்கள் பேசும் தமிழ் மொழி என்பது ஒரு மொழி இல்லையா? தமிழக மக்களுக்குப் பண்பாடு கலாச்சாரம் இல்லையா? இந்த வரலாற்றுக் கூறுகளை மறுப்பதற்கு யார் அந்த உரிமையை அவருக்கு கொடுத்தது? தமிழ்நாடு இந்தியாவிற்குள் தானே இருக்கிறது.

 

தமிழகத்தை ஆட்சி புரியும் இந்த அரசின் ஊழலை ஏன் இதுவரை சிபிஐ விசாரிக்கவில்லை? தன்னிடம் இருக்கும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் தமிழக அரசை பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் இயக்குகிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் ரிமோட் மோடியாக இருந்தாலும் பேட்டரியாக இருக்கும் அ.தி.மு.க அரசை மக்கள் வீழ்த்தப் போகிறார்கள். ஆம் அந்த பேட்டரியை தமிழக மக்கள் கழட்டி எறியப் போகிறார்கள். மோடி ஐந்தாறு பெரும் தொழிலதிபர்களுக்காக வேலை செய்கிறார்.

 

தமிழக மக்களைப் பலவீனப்படுத்தும் வகையில் மோடி செயல்படுகிறார். மத்திய அரசை எதிர்த்து தமிழக முதல்வர் எந்தக் கேள்வியையும் கேட்பது இல்லை. ஏனென்றால் அவரது ஊழலில் இருந்து காத்துக் கொள்ளவே அவர் மவுனம் காக்கிறார். தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் மு.க.ஸ்டாலின் முதல்வராவார்" என்றார்.

 

இந்தச் சுற்றுப் பயணத்தின்போது ஒரு சிறுமியிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டார் ராகுல் ராகுல் காந்தி. அந்தச் சிறுமிக்கு இது பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேபோல் விவசாயிகளிடமும் பேசினார். இரவு திண்டுக்கல் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டில்லிக்குப் பயணமாகிறார். ராகுல் காந்தியின் மூன்று நாள் தேர்தல் பரப்புரை மற்றும் எளிமையாக மக்களைச் சந்தித்தது என எல்லாமே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக உற்சாகமடைந்துள்ளனர்.

 

அ.தி,மு.க.வுக்கு சாதகமான பகுதி என்று சொல்லப்படும் கொங்கு மண்டலத்தில், ராகுலின் பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.