Skip to main content

நீச்சல் மட்டுமல்ல நடனமும் தெரியும்! - பள்ளி நிகழ்ச்சியில் அசத்திய ராகுல்!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

rahul gandhi

 

மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த போது அரசியல் கூட்டங்களில் மட்டுமில்லாமல், சில பள்ளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். அதேபோல் தமிழகத்தில் இன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த அவர், அங்குள்ள தனியார் பள்ளிக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

 

ராகுல் காந்தியை அப்பள்ளி மாணவர்கள், வழுக்கு மரத்தில் சாகசம் செய்து வரவேற்றனர். அதன்பிறகு ராகுல் காந்தி அப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அக்கிடோவில் கறுப்பு பெல்ட் பெற்றவரான ராகுல் காந்தி, அங்கு ஒரு மாணவருக்கு அக்கிடோவில் கலையைச் செய்து காட்டினார். அதன்பிறகு 10-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மெரோலின் ஷெனிகாவின் சவாலை ஏற்று, அவரோடு புஷ்-அப் செய்தார். மேலும் பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

 

இதனையடுத்து அங்கு பேசிய அவர், இந்தியாவிற்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் தேவை எனக் கூறினார். ராகுல் காந்தி பேசியது பின்வருமாறு:

 

ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும், அவர்கள் விரும்புவதைக் கேட்காமல் செய்யப்படும் எந்தவொரு கொள்கையும் கல்விக்குப் பயனளிக்கும் கொள்கையாக இருக்கப்போவதில்லை. நீட் பிரச்சினை இங்கே ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அது நிறைய இளைஞர்களை, தங்கள் கனவுகளை அடைவதிலிருந்து தடுக்கிறது. எனவே அது பயனளிக்காது.

 

பிரதமர் மோடி அவர்களே, இந்தியா வெவ்வேறு கருத்துகள், மொழிகள், மதங்கள் மற்றும் பார்வைகளையும் கொண்டுள்ளது. எல்லா யோசனைகளும் உங்களிடமிருந்து வர வேண்டும் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்? இந்திய மக்களை நீங்கள் ஏன் கேட்கவில்லை? மக்கள் விரும்புவதை நீங்கள் ஏன் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை?

 

இந்தியாவுக்கு இப்போது தேவைப்படுவது மற்றொரு விடுதலைப் போராட்டம். ஆனால் அது அகிம்சை மற்றும் பாசத்தோடு இருக்க வேண்டும். இந்தியாவில் கோபமும் பயமும் நிறைய பரவியிருக்கிறது. அதற்கு எதிராகத்தான் நாம் போராடி, மீண்டும் இந்தியாவை மகிழ்ச்சியாகவும், வசதியாகவும், அச்சமற்றதாகவும், ஒற்றுமையாகவும் மாற்ற வேண்டும். 

 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, வரலாற்றில் அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றியது. துரதிர்ஷ்டவசமாக, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா ஆகியவை அந்த மக்களை மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளது. இந்தியாவில் வறுமை மீது இறுதித் தாக்குதலை, 'நியாய்' மூலம் எவ்வாறு செய்வது என்பது குறித்து எங்களுக்கு நல்ல யோசனை உள்ளது. 'நியாய்' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஏழை இந்திய குடும்பத்திற்கும், ஒவ்வொரு ஆண்டும், அவர்கள் வறுமையிலிருந்து வெளியேறும் வரை 72,000 ருபாய் வழங்குவதற்கான திட்டதை, நாங்கள் அரசமைத்தால் செயல்படுத்துவோம். இதன்மூலம் 5-6 ஆண்டுகளில், வறுமையை முற்றிலுமாக ஒழிப்போம். இந்தியாவுக்குப் பணப் பற்றாக்குறை இல்லை. இந்தியாவின் பிரச்சனை பணம் விநியோகிக்கப்படும் விதம். 'நியாய்' திட்டம் இந்தியாவில் நியாயமற்ற வருமான விநியோகத்தைக் குறைக்கும்

 

நாட்டிலுள்ள பணக்காரர்கள், ஏழ்மையான மக்களை விட மிகக் குறைந்த விகிதத்தில் வங்கிக் கடனைப் பெற முடியும். ஆமாம், ஏழைகளுக்கு நிதி பற்றி புரிந்துகொள்ள நாம் உதவ வேண்டும். ஆனால் அதேசமயம், இந்த அமைப்பு ஏழை மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

இன்று பள்ளி மாணவர்களுடன் அசத்திய ராகுல், சமீபத்தில் கேரள மீனவர்களுடன் கடலில் இறங்கி நீச்சல் அடித்ததும் வைரலாகியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Deva Gowda crictizes Rahul gandhi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் தேவகவுடா தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர், “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?. சொத்து மறுபங்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டின் செல்வத்தை உயர்த்திய இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை அவமதித்து அவமானப்படுத்தியுள்ளார். இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்ததெல்லாம் தவறு என்று மறைமுகமாக சொல்ல முயல்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அரசாணையைக் கிழித்தெறிந்தது போல் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்களைக் கிழித்தெறிந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.