தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று ராகுல் காந்தி காணொளியில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை ஆளும் அதிமுக, மற்றும் திமுக கட்சிகள் செய்து வருகிறார்கள். பாஜக கூட்டணி தொடர்பான அறிவிப்புகளையும் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வரும் சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த அளவில் தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஆளும் கட்சிக்கு அது சாதகமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் திமுக முன்னணியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் ராகுல்காந்தி இன்று மதியம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். சட்டமன்ற தேர்தல், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தமிழக காங்கிரஸாரின் கருத்தை அவர் கேட்ட உள்ளார்.