Skip to main content

''ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக'';ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்- ஸ்டாலின் பேச்சு!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வெண்கல திருவுருவச் சிலையை திறந்து வைத்த பிறகு மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல முக்கிய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். அந்த மலரஞ்சலி நிகழ்விற்குப் பிறகு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தி பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

 

 

Rahul Gandhi to be PM - Stalin talks!

 

நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன், திளைத்துப்போய் நின்றிருக்கிறேன். காரணம் தமிழர்களுடைய வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான நாள். மறக்கமுடியாத நாளும் கூட, இக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், தந்தை பெரியார் பிறந்த நாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள், நமது தலைவர் கலைஞர் பிறந்தநாள், அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட நாள், இந்த புகழ்மிக்க வரிசையிலே கலைஞர் சிலை திறப்பு விழா நாளும் இணைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். திமுகவின் அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாள் இந்த நாள். 

 

 

1971 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக கலைஞர் இருந்தபொழுது, தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய தலைவர் கலைஞருக்கு சிலை வைத்திட வேண்டும் என முடிவு செய்து அதற்காக ஒரு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவிற்கு புரவலராக தந்தை பெரியார் அவர்களே பொறுப்பேற்றார். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பெரியார் அவர்கள் மறைந்தார்கள். பின்னால் மணியம்மையார் அவர்கள் அந்த பொறுப்பை ஏற்று  கலைஞருடைய சிலையை அண்ணாசாலையில், எல்ஐசி கட்டிடத்திற்கு அருகில் வைத்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். அதற்குப் பிறகு அந்த சிலை விவகாரம் என்ன என்பது உங்களுக்குப் புரியும்.

 

D

 

இன்றைய தினம் நம்முடைய தலைவர் கலைஞருக்கு திறக்கப்பட்டுள்ள சிலை அண்ணாவின் அருகிலே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்ற அவருக்கு நாளெல்லாம் அண்ணா... அண்ணா... என்று உருகிய தலைவருக்கு, அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயத்தில், அண்ணா சிலைக்கு அருகில் நம்முடைய தலைவர் கலைஞருடைய சிலை அமைக்கப்பட்டிருக்கிறது மகிழ்ச்சிகரமானது.

 

 

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி தன்னை பிரதமர் என்று நினைக்காமல் ஏதோ பரம்பரை மன்னர் ஆட்சி நடத்துவதாக மமதை கொண்ட பிரதமராக மோடி இருக்கிறார். தன்னை பிரதமராக மட்டுமல்ல ஜனாதிபதியாக, தன்னை உச்சநீதிமன்றமாக, தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே சிபிஐயாக, தன்னையே வருமானத்துறையாக நினைத்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அனைத்து கட்சிகளும் சேர்ந்து நரேந்திரமோடிக்கு எதிராக ஒன்று திரண்டு இருக்கிறோம். இது ஏதோ நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக அல்ல நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சேர்ந்திருக்கிறோம்.

 

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவோடு மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்போதெல்லாம் நம்முடைய தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு திட்டங்களை சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது, நம் மொழி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தரப்பட்டது, சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போதைய பிரதமர் சாடிஸ்ட்டாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் மோடி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இந்த வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன் என்று சொன்னால் அவ்வளவு பெரிய பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் கஜா புயலில் 65 பேர் இறந்தார்கள், 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று சொன்னால் இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். இவ்வளவு பெரிய பேரிடர் குஜராத்தில், மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருந்தால் நரேந்திரமோடி சென்று சென்று பார்க்காமல் இருப்பாரா? மாட்டாரா? தமிழ்நாடு என்பதால் மறந்துவிட்டார். 

 

 

ஆள் வரவில்லை ஆனால் அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம். ஒரு ஆறுதல், கவலை கொண்டேன் என்று ஒரு செய்தி அல்லது இரங்கல் தெரிவித்து ஏதேனும் ஒரு செய்தி உண்டா. அந்த அளவிற்கு தமிழ்நாடு என்ன பாவப்பட்டு கிடைக்கிறதா?. 2017ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் நாள் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடந்தது இறந்தவர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ட்விட் போடுகிறார். ஆனால் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதல் கூட சொல்ல மறுக்கிறார். எனவேதான் அவரை  கொடூர மனப்பான்மை கொண்டவர் என நான் இங்கே பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். அவ்வளவு அலட்சியமா அதனால்தான் மோடியை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறோம். 21 கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன, இன்னும் பல கட்சிகள் வரத்தான் போகிறது. இந்த நாடு பார்க்கத்தான் போகிறது. இந்த மேடையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என்று கூறிய  ஸ்டாலின்  ராகுல் காந்தியே  வருக நல்லாட்சி தருக என்ற முழக்கத்துடன் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.