Skip to main content

ராகவா லாரன்ஸ் முகவரி தெரியாமல் பிளாட்பாரத்தில் தவித்த குடும்பம்! லாரன்சே காரில் அழைத்து சென்று உதவி செய்தார்!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

சிறுவனின் மருத்துவ உதவிக்காக நடிகர் ராகவா லாரன்சை சந்திக்க சென்னை வந்து, முகவரி தெரியாமல் எழும்பூர் ரயில்வே பிளாட்பாரத்தில் தவித்த வந்த ராஜபாளையத்தை சேர்ந்தவர்களின் பரிதாபம் செய்திகளின் மூலம் தெரியவரவே, ராகவா லாரன்ஸ், அவர்களை தனது வீட்டிற்கு காரில் அழைத்து வந்து உதவி செய்தவதாக உறுதியளித்துள்ளார்.

r

 

 ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலட்சுமி.  இவரது மகன் சூர்யாவுக்கு பிறந்து சில ஆண்டுகளூக்கு பின்னர் நடக்க முடியாமல் போனது.   அதன்பின்னர், பேசவும் முடியவில்லை. சீராக இயங்கிய இதயம் எப்போதும் படபட என்று அடிக்க தொடங்கியது. செல்போன் மணி ஒலித்தாலே அதை தாங்க முடியாமல் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டான் சூர்யா.

 
குருலட்சுமியின் கணவன் பிரிந்து சென்று விவாகரத்து கேட்பதால், அக்காவு குருலட்சுமிக்கு வெங்கடேசன் தான் உதவியாக இருக்கிறார்.   சகோதரிக்காக தனது திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார்.  வேங்கடேசனும் குருலட்சுமியும் சூர்யாவை தோளில் சுமந்து பல மருத்துவமனைகளுக்கும் அலைந்து சென்றும்  பிரயோசனமில்லை.    

r

 

இந்த நிலையில்,  சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை பாருங்கள். அவர் மருத்துவ உதவி செய்வார் என்று இவர்களிடம் கூறியிருக்கிறார்கள். இதையைடுத்து சூர்யாவை எப்படியும் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில், மூவரும் சென்னை வந்தனர். ஆனால் அவர்களால் லாரன்சின் முகவரியை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.  ஊருக்கு திரும்பவும் முடியாமல், சூர்யாவுக்கு  சிகிச்சை அளிக்கவும் முடியாமல் கடந்த சில தினங்களாக பிளாட்பாரத்திலேயே தங்கி இருந்தார்கள். 

 

இவர்களின் இந்த பரிதாப நிலையை செய்திகளின் மூலமாக அறிந்துகொண்ட ராகவா லாரன்ஸ், தனது உதவியாளர் மூலம் அவர்களை தனது வீட்டிற்கு காரில் அழைத்து வந்து, உபசரித்து சிறுவன் சூர்யாவுக்கு தனது அறக்கட்டளை மூலமாக உதவிகள் செய்யப்படும்.  மேலும், மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், அரசை அணுகி உதவி பெற்றுத்தருவோம் என்று  நம்பிக்கை கொடுத்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தம்பியுடன் களமிறங்கும் பிரபல நடிகர்

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

ks ravikumar directing next movie starring Raghava Lawrence and elvin

 

'ஃபைவ் ஸ்டார் கிரியேக்ஷன்' சார்பாக கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக் கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சகோதரர் எல்வினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க, ட்ரென்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு கே.எஸ் ரவிக்குமார் தமிழ் படம் இயக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

 

Next Story

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

Aishwaryaa rajinikanth directing raghava lawrence Durga durga film

 

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ராகவா லாரன்ஸ் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்தாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதாநாயகனாக "துர்கா" படத்தில் நடிக்கவுள்ளார். துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்கள் நிறைய இருப்பதால் துர்கா படத்திலிருந்து விலகியுள்ளனர். 

 

இந்நிலையில் 'துர்கா' படத்தை ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் '3', கெளதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'பயணி' என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராகவா லாரன்ஸ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது 'துர்கா' படத்தை இயக்க வேண்டும் என  கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு கூட இத்தகவலை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.