Skip to main content

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு!- தடையை விலக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதியரசர் அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. 


அப்பாவு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி  உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்‘இந்த வழக்கு தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு அல்லவே? எனவே, இவ்வழக்கில் இந்த நிலையில்,  உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிடவேண்டுமா?’  என்று கேட்டனர்.  இதற்கு இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரத்தோஹி‘இந்த வழக்கு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கெஜட்டட் அதிகாரிகளா? அவர்கள் தபால் வாக்குகளை அட்டெஸ்டேஷன் பண்ண முடியுமா? என்ற கேள்வி சம்மந்தமானது. 

RADHAPURAM POSTAL VOTE COUNTING SUPREME COURT ORDER



எனவே, இந்த சட்டவினாவில் உச்சநீதிமன்றம் தலையிட்டு விளக்கவேண்டும். இது குறித்து விரிவாக நான் வாதிட தயாராக உள்ளேன்.’என்றார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே வழங்கிய தடை ஆணையை விலக்க மறுத்ததோடு, வழக்கு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.