ராதாபுரம் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரான அப்பாவு. விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் ராதாபுரம் சட்டமன்றத்தில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.
அதன்படி பதிவான வாக்குகளின் மின்னணு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகள் நெல்லை ராமையன்பட்டியிலுள்ள அரசு குடோனில் வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவிற்கேற்ப அவைகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாவட்டக் கலெக்டர் ஷில்பாவின் மேற்பார்வையில் அனுப்பிவைக்கப்பட்டது.