Skip to main content

வெறிநாய்கள் அட்டகாசம்.... சிறுவனைக் கடித்துக் குதறி காட்டிற்குள் இழுத்துச் சென்ற கொடூரம்!

Published on 05/09/2021 | Edited on 05/09/2021

 

The rabid dogs roared .... The cruelty of biting the boy and dragging him into the jungle!

 

நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் மக்கள் நெருக்கம் கொண்ட நகரம். இங்குள்ள அரசு மருத்துவமனையின் மேல்புற ஒதுக்குப்பகுதியில் அன்றாடம் நகரில் சேரும் கோழிக் கழிவுகள் மற்றும் ஆட்டிறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவது வழக்கமாக இருந்திருக்கிறது. இரத்தமும் சதையுமாக இருக்கும் அந்தக் கழிவுகளை அன்றாடம் நாய்களின் கூட்டம் தின்று வருவதன் காரணமாக அவைகளுக்கு வெறி ஏறியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் அன்றாடம் சதைக்கழிவுகளைத் தின்று வருகின்றன என்கிறார்கள் அந்தப் பகுதியினர்.

 

இதனிடையே கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டடை பகுதியைச் சேர்ந்த செய்யது அலி மகனான சிறுவன் ஆதில்(7) கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பக்கமாகச் சென்றிருக்கிறான். அது சமயம் அந்தச் சிறுவனை சுற்றிய 10க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கூட்டம் அவனைச் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறியிருக்கிறது. மட்டுமல்ல அப்படியே அந்தச் சிறுவனை காட்டுப்பகுதியை நோக்கி இழுத்துச் சென்றபோது சிறுவனின் கதறல் கேட்டு அந்த வழியாக சென்ற சிலர் நாய்களை விரட்டிவிட்டு படுகாயமடைந்த சிறுவன் ஆதிலை கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கின்றனர். அங்கே ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பின்பு தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். வெறி நாய் கடிகளால் படுகாயமுற்ற சிறுவனுக்கு அங்கே அவசர சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

 

இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க.வின் வ.மா.செ.செல்லத்துரை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஆதிலை பார்வையிட்டு பெற்றோர்களுக்கு ஆறுதலும் சொன்னார். தொடர்ந்து சிறுவனின் உடல் நலம் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தவர் மாவட்டக் கழகம் சார்பில் நிவாரண உதவிகளும் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் சிறுவன் ஆதிலின் நிலைமைகளைச் சொல்லி கடையநல்லூரைச் சுற்றித் திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 

அதே சமயம் நகரவாசிகளும் இந்தக் கொடூர சம்பவம் காரணமாக பீதியில் உறைந்து போனவர்கள் நகராட்சி நிர்வாகம் உடனடியாக வெறிநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.