Skip to main content

குள்ளநரிக்கு பதில் முயலை களமிறக்கிய மக்கள்... தோல்வியை சந்தித்த இளைஞர்கள்!

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

பொங்கல் பண்டிகை என்றால் எருது விடும் விழா கேள்விப்பட்டுயிருக்கிறோம். சில இடங்களில் மறைமுகமாக கோழி பந்தயம் நடைபெறுகிறது. குதிரை வண்டி ஓட்டும் பந்தயமும் நடைபெறுகிறது. ஆனால் முயல் போட்டி கேள்வி பட்டுள்ளீர்களா?

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில் உள்ளது நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகையின்போது குள்ளநரியை ஓடவிடும் விழா நடைபெற்றுவந்துள்ளது. இந்த விழா மக்கள் ஒற்றுமையுடன் வாழவும், விவசாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என குள்ளநரியை கோயில் மைதானத்தில் ஓடவிடுவது வழக்கம். இதனை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம், அப்படி பிடித்து வந்தால் அவர்களுக்கு கடவுளின் முழு ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 

The rabbit taken down by the people...

 

இந்த குள்ளநரியை ஓடவிடுவதற்கு முன்பு அதனை அலங்கரித்து ஊர்வலம் அழைத்து வருவார்கள். அப்படி அழைத்து வந்து கோயில் மைதானத்தில் காத்துள்ள பொதுமக்களுக்கு காட்டுவார்கள். பின்பு குழந்தைகளின் தலைமீது குள்ளநரியை வைத்து எடுப்பார்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்கள் எதுவும் அண்டாது என்பது அம்மக்களின் நம்பிக்கை. அதன்பின்னர் குள்ளநரியை மைதானத்தில் விடுவார்கள். அதனை பிடிக்க இளைஞர்கள் முட்டி மோதுவார்கள். பிடித்துவிட்டால் பிடித்தவர் அதிஷ்டக்காரராக பார்க்கப்படுவார், கடவுளின் முழு ஆசி அவருக்குள்ளது என்பத நம்பிக்கை

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை குள்ளநரியை இப்படி ஓடவிட்டுள்ளார்கள். அதன்பின் குள்ளநரி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் குள்ளநரிக்கு பதில் முயலுக்கு மாறியுள்ளார்கள். கடந்த 6 ஆண்டுகளாக முயல் போட்டி நடக்கிறது. இதற்காக மார்கழி மாதம்மே ஒரு முயலை வாங்கி அதே ஊரை சேர்ந்த ஒருவரின் வீட்டில் வளர்த்துவந்துள்ளனர் அந்த கிராமத்து மக்கள். காணும் பொங்கலன்று ஜனவரி 17ந்தேதி முயலை அலங்கரித்து டிரக்டரில் கோயில் முன்பு கொண்டு வந்து குழந்தைகளின் தலை மீது வைத்து ஆசி வழங்கவிட்டு மைதானத்தில் விட்டுள்ளனர்.

 

The rabbit taken down by the people...

 

நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் அதனை பிடிக்க முயல, அனைவருக்கும் போக்குகாட்டிவிட்டு அந்த முயல் அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் போய் புகுந்துப்போய்விட்டது.

இந்த விழாவில் நல்லூர் மட்டும்மல்லாமல் சோகத்தூர், தெய்யார், எரமலூர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவை காண வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 




 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு; முதலிடம் பிடித்த அபி சித்தர்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Completion of lower bank jallikattu; Abhi Siddhar topper

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை இன்று (24.01.2023) திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக மாடு பிடி வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை மாட்டு சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் ஐ. பெரியசாமி எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் சிலையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

vck ad

தொடர்ந்து அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் தற்பொழுது போட்டியானது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் 10 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். தலா 6 காளைகளை அடக்கி சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன், பரத் ஆகிய இருவர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதல் பரிசாக மஹிந்திரா தார் கார் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட உள்ளது. அண்மையில் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல் செய்யப்பட்டதாகவும், இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் தான் காரணம் எனவும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர்  குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.