Skip to main content

 "சரியான நேரத்தில் முடிவு எடுக்காவிட்டால், தகுதியற்றவர்களாக ஆகிவிடுவீர்கள்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

r n ravi discussed with civil service aspirants in raj bhavan 

 

சென்னை ராஜ்பவனில் நேற்று , குடிமைப்பணி தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் "எண்ணித் துணிக" என்ற தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி  கலந்துரையாடினார்.

 

அப்போது அவர் மாணவர்களிடம் பேசும் போது, " நான் முதுநிலை படிப்பை முடிக்கும் வரையில் என் விடுதி அறையில் மின்விசிறி வசதி கூட கிடையாது. தினமும் செய்தித்தாள்,  புத்தகம் மட்டுமே படிக்க முடிந்ததால் எனக்கு கவன சிதறல் ஏற்பட்டதில்லை. வான் இயற்பியல் நிபுணர் ஆவது என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் வாழ்க்கை என் பாதையை மாற்றி விட்டது. குடிமை பணியாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் தவறாக கூட முடிவுகளை எடுக்க நேரிடும். சில தவறான முடிவுகளை நானும் எடுத்து உள்ளேன். ஆனால் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்து விடக்கூடாது.  சரியான நேரத்தில் முடிவு எடுக்காவிட்டால் தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள்.

 

இரண்டு வரிகளில் ஆழமான பல கருத்துக்களை உள்ளடக்கியது திருக்குறள். இது மிகப்பெரிய சொத்து. அதை படித்து நான் உத்வேகம் அடைந்தேன். தமிழ் மொழி மிக அற்புதமான படைப்புக்களை கொண்டுள்ளது. திருக்குறளின் மொழிபெயர்ப்பு அதன் ஆழமான  கருத்துகளை எடுத்துரைக்கவில்லை. நுண்ணறிவை அதிகரிக்கும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நம் பொருளாதாரத்தை சீர் குலைக்க நினைத்தால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கையில் எடுக்கும்.

 

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒற்றை இலக்கை நோக்கி திடமான மன உறுதியுடன் பயணிக்க வேண்டும். தினமும் 13 முதல் 14 மணி நேரம் படிப்பதற்க்காக ஒதுக்க வேண்டும். கவனத்தை திசை திருப்பும், மொபைல் போன், டிவி போன்றவைக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. திட்டமிட்டதை அந்த நேரத்தில் செய்யுங்கள்.பொழுதை தட்டிக் கழிக்காதீர்கள். உங்கள் மனஉறுதி உங்களிடம் தான் உள்ளது" என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.