'நிவர்' புயல் காரணமாகச்சென்னையில் உள்ள பெரும்பாலான ஏரிகள் அதன் முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. குறிப்பாக, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, அதன் முழுக்கொள்ளவை அடைந்ததால், அதிலிருந்து உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையின் மற்றொரு முக்கிய குடிநீர் ஆதரமான புழல் ஏரியும் வேகமாக நிரம்பிவருகிறது. இந்நிலையில், புழல் ஏரியின் அருகே இருக்கும், பம்மது குளம்நிரம்பி, அதன் உபரி நீர் வெளியேறி வருகிறது. அதில், குழந்தைகள் குஷியாக குளியல்போட்டு விளையாடுகின்றனர். அதேபோல் இளைஞர்கள் பலரும் அதில் மீன் பிடித்துவருகின்றனர்.

Advertisment