Skip to main content

திறக்கப்பட்டன செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள்!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

puzhal, chembarambakkam lakes are opening

 

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தலா 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 21 அடியை எட்டியதைத் தொடர்ந்து புழல் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 2,550 கனஅடி வீதம் தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
 Increase in water flow to Sembarambakkam Lake

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று வினாடிக்கு 36 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 497 கன அடியாக உயர்ந்துள்ளது.

அதே சமயம் 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று 21.93 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி இருந்தது. இன்றைய நிலவரப்படி 22.05 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்றிலிருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

Next Story

முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Reduction of water opening in Chembarambakkam Lake

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக நேற்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.

 

தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 4,000 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 23.45 அடியாகவும், கொள்ளளவு 3,473 மில்லி கன அடியாகவும் உள்ளது.