Skip to main content

ஜாதி அரசியலுக்குள் பயணிக்க விருப்பமில்லை;என்னைப் போல பலரும் விரைவில் விலகுவார்கள்- சண்முகநாதன் பேட்டி

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கரம்பக்காடு ஜெமின் கிராமத்தைச் சேர்ந்தவர் குழ.சண்முகநாதன். (வயது50). செரியலூர் ஜெமின் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். அ.தி.மு.க பொறுப்புகளில் இருந்தவர். உள்கட்சி பிரமுகர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தொடர்ந்து அந்த கட்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பொறுப்பு வழங்கப்பட்டதுடன் செலவுகளையும் கட்சியின் தெற்கு மா.செ. பரணி கார்த்திகேயன் கவனித்துக் கொண்டார். 

 

s

 

இந்த நிலையில் தான் வடக்கு மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி ஒன்றியத்தில் புதிய பொறுப்பாளர்கள் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 6 ந் தேதி சண்முகநாதனுக்கு தெரியாமல் கறம்பக்குடி ஒன்றியத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதுடன் பிரமாண்ட ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கட்சி தலைமை வரை இந்த பிரச்சனையை கொண்டு செல்ல சண்முகநாதன் முயன்றும் கட்சி தலைமை அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகநாதன்  சனிக்கிழமை காலை அ.ம.மு.க வில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தார். 


    
இது குறித்து குழ.சண்முகநாதன் கூறும் போது.. அ.தி.மு.க வில் நீண்ட காலம் அரசியலில் இருந்தேன். கடந்த ஆண்டு அ.ம.மு.க வில் இணைந்து புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றினேன். ஆனால் என்னை சுயமாக பணிசெய்யவிடாமல் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து வந்தனர். மேலும் வடக்கு மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி போன்ற ஒன்றியங்களில் கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்ய பட்டியல் தயார் செய்து வைத்திருந்த நிலையில் என் பரிந்துரை இல்லாமல் தெற்கு மாவட்டச் செயலாளரின் பரிந்துரையின் பேரில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

 

அதற்கு மேல் அறந்தாங்கி நகரச் செயலாளர் சிவசண்முகம் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார். அதனால் கட்சி நிர்வாகிகள் மன வேதனையடைந்துள்ளனர். மேலும் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கே கட்சி பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று வழங்கி வருகின்றனர். அதனால் சமீப காலமாக ஜாதிக்கட்சி போல அமைந்துவிட்டது. இது பற்றி எல்லாம் துணைப் பொதுச் செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரம் கேட்டால் கிடைக்கவில்லை. அதனால் அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்னை சென்று முதலமைச்சரை பார்த்து அ.தி.மு.க வில் இணைந்துவிட்டேன். என் கட்சிப்பணிகளைப் பார்த்து பொறுப்புகள் கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் பதவிகளை எதிர்பார்த்து தாய் கழகத்தில் இணையவில்லை என்றவர், என்னைப் போல விரக்தியில் உள்ள பலரும் தேர்தலுக்கு முன்பே அ.ம.மு.க வில் இருந்து விலகி அ.தி.மு.க வுக்கு வருவார்கள் என்றார்.


            

சார்ந்த செய்திகள்

Next Story

 81 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் சிவன்! களைகட்டும் மகா சிவராத்திரி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

தமிழ்நாட்டில் உயரமாக முழு உருவத்தில் எழுந்து நின்று தோற்றமளிக்கும் சிவன் சிலை புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலத்தில் உள்ளது. 81 அடி உயரத்தில் சிவனும் ஏழேகால் அடி உயரத்தில் தலைமைப் புலவர் நக்கீரரும் சிலையாக நிற்கும் கீரமங்கலம் நோக்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்களின் வருகை தொடங்கியுள்ளது.

கீரமங்கலத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் ஆலயம் உள்ளது. 800 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் முன்பு உள்ள தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்ட முழுஉருவ சிவன் சிலையும், சிவனிடம் உண்மைக்காக தர்க்கம் செய்த இடமாக கருதப்பட்டதால் தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழேகால் அடியில் கல்சிலையும் அமைத்து பழமையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் சிலைகள் திறப்பு மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதை லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு உயரமான சிவனைப் பார்க்க தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வரும் சிவ பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல மகாசிவராத்திரி நாளில் மகா சிவனைக் காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தில் கிரிவலம் சென்று, இரவு தங்கி இருந்து அதிகாலை செல்கின்றனர். இந்த வருடமும் அதிக பக்தர்கள் கூட்டம் வரலாம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.