Skip to main content

விமானப்படை அதிகாரி அபிநந்தன் வருகையை மரக்கன்று நட்டு கொண்டாடிய மாணவர்கள்!

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான இருக்கைகள், மேஜைகள், மற்றும் பல்வேறு பொருட்களை கிராம மக்கள் கல்வி சீராக கொண்டு வந்து கொடுத்தனர். இந்த விழா திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன் தலைமையில் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ் முன்னிலையில் நடந்தது. கிராம மக்கள் கொண்டு வந்த கல்வி சீர் கொண்டு வந்த போது அவர்களை மாணவர்கள் ஆரத்தி எடுத்து வணங்கி வரவேற்றனர். பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியை பூமொழி பெற்றுக் கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார். கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

se


    இந்த நிலையில் இந்திய விமானப்படை அதிகாரி பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா வருவதை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் பலா மரக்கன்று நட்டு கொண்டாடினார்கள்.

 

se


    இது குறித்து மரம் தங்க கண்ணன் கூறும் போது.. இந்த சேந்தன்குடி கிராமத்தில் மரம் தங்கச்சாமி இருக்கும் வரை தலைவர்கள் பிறந்த நாள், நினைவு நாள், மற்றும் முக்கிய தினங்களில் அடையாளமாக மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது வழக்கம். அவர் வைத்த ஏராளமான மரங்கள் புயலில் சாய்ந்தாலும் பல இடங்களில் அடையாளமாக நிற்கிறது. அதே போல தான் இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி இருந்தாலும் நல்லுறவு அடிப்படையில் உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதனால் அந்த தினத்தை நினைவு கூறும் விதமாக அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பலா மரக்கன்று நட்டுள்ளனர். இந்த மரக்கன்று வளரும் போது அடுத்து வரும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எதற்காக இந்த கன்று நடப்பட்டது என்பதை பார்த்து அறிந்து கொள்வார்கள் என்றார்.


            

சார்ந்த செய்திகள்

Next Story

 81 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் சிவன்! களைகட்டும் மகா சிவராத்திரி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

தமிழ்நாட்டில் உயரமாக முழு உருவத்தில் எழுந்து நின்று தோற்றமளிக்கும் சிவன் சிலை புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலத்தில் உள்ளது. 81 அடி உயரத்தில் சிவனும் ஏழேகால் அடி உயரத்தில் தலைமைப் புலவர் நக்கீரரும் சிலையாக நிற்கும் கீரமங்கலம் நோக்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்களின் வருகை தொடங்கியுள்ளது.

கீரமங்கலத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் ஆலயம் உள்ளது. 800 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் முன்பு உள்ள தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்ட முழுஉருவ சிவன் சிலையும், சிவனிடம் உண்மைக்காக தர்க்கம் செய்த இடமாக கருதப்பட்டதால் தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழேகால் அடியில் கல்சிலையும் அமைத்து பழமையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் சிலைகள் திறப்பு மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதை லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

Shivratri celebrations at the 81 feet high Shiva temple in Keeramangalam

குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு உயரமான சிவனைப் பார்க்க தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வரும் சிவ பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல மகாசிவராத்திரி நாளில் மகா சிவனைக் காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தில் கிரிவலம் சென்று, இரவு தங்கி இருந்து அதிகாலை செல்கின்றனர். இந்த வருடமும் அதிக பக்தர்கள் கூட்டம் வரலாம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.