Skip to main content

மது விற்பனையை தடுக்க சென்ற இளைஞர் மீது மதுப் பாட்டிலால் தாக்க முயன்றதால் பரபரப்பு

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று பெண்கள் பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடர் போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த டாஸ்மாக் மேலாளர், கலால் அதிகாரி மற்றும் வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதனும் கலந்து கொண்டார். 

 

t


பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அகற்றுவதாக அதிகாரிகள் வாய்மொழியாக ஒத்துக் கொண்டனர். ஆனால் போராட்டக்குழு பெண்கள் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஒத்துக் கொண்டு கடைகள் அகற்றப்படும் என்பதை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அதன்படி சமாதானம் குறித்து எழுதப்பட்ட நிலையில் உடன்படிக்கையில் கையெழுத்து போடாமல் ஒவ்வொரு அதிகாரியாக வெளியேறியதால் போராட்டக்குழு பெண்கள் அதிகாரிகளின் காலைப் பிடித்து கையெழுத்துப் போடும்படி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் பதில் சொல்லாமல் வெளியேறியதால் ஆத்திரமடைந்த சுமார் 2 ஆயிரம் பெண்களும் திரண்டு வந்து அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்த திருமண மண்டபத்தில் சிறைப்பிடித்தனர். 

 

தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்ற பெண்கள் 2 டாஸ்டமாக் மதுபானக் கடைகளையும் அடித்து உடைத்தனர். அதன் பிறகு அந்த இரு டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூடுவதாகவும், இனிமேல் கொத்தமங்கலம் ஊராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் கணேஷ் அறிவித்தனர்.   ஆனால் அதன் பிறகு சில தனிநபர்கள் சட்டவிரோதமாக கொத்தமங்கலம் கடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்க வேண்டும் என்று கிராமத்துப் பெண்களும் பொதுமக்களும் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில்  ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போதும் அதிகாரிகள் சட்டவிரோத மது விற்பனை நடக்காமல் தடுப்பதாக கூறிச் சென்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. 

 

t

இந்நிலையில் தான் இன்று கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் உள்ள தியாகி நல்லையா சேர்வை பூங்காவில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் குழாய் அருகே சிலர் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதை பார்த்த அந்தப் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் மற்றும் சில  இளைஞர்கள் தட்டி கேட்டதுடன் மது விற்பனை செய்யக் கூடாது என்று மதுப்பாட்டில்களை கைப்பற்றி உடைக்க முயன்றனர். அவர்களுக்கு ஆதரவாக அங்கு நின்றிருந்த பல இளைஞர்களும் மதுபானம் விற்கக் கூடாது என்று தடுத்து உள்ளனர். 


இதனால் ஆத்திரமடைந்த சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த அ.தி.மு.க பிரமுகர்கள் உள்பட பலர் ஜெயசீலன் உள்ளிட்ட இளைஞர்களை கடுமையாக தாக்கி கழுத்தை நெறித்ததுடன் மதுப்பாட்டிலால் தலையில் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

 

இந்த சம்பவத்தை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கியதோடு கொத்தமங்கலத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை அனுமதிக்க கூடாது என்றும் இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினரும் அதிகாரிகளும் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பெண்கள், பொதுமக்கள், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்கின்றனர் இளைஞர்களும், பெண்களும்.
        

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.