Skip to main content

ஓட்டுப் போடும் முன்பு ஒரு மரக்கன்று நடுவோம்! 5 ஆண்டுகளில் பலன் கொடுப்பது நீங்கள் வைத்த மரமா? நீங்கள் போட்டா ஓட்டா?

Published on 18/03/2019 | Edited on 19/03/2019


 
    ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டுச் சாவடிக்கு செல்லும் முன்பு ஒரு மரக்கன்று நட்டுவிட்டு செல்லுங்கள். 5 ஆண்டுகளில் நீங்கள் ஓட்டுப்போட்ட வேட்பாளர் பலன் கொடுக்கவில்லை என்றாலும் நீங்க நட்ட மரம் பலன் கொடுக்கும் என்று சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மரக்கன்று நட அழைப்பு கொடுத்துள்ளனர்.

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் மரக்கன்று நடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவுகளை இளைஞர்கள் பதிவிட்டும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

 

t


  

 அதாவது ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டுப் பதிவு செய்யும் முன்பு தங்கள் வீட்டிலோ அல்லது சாலை ஓரங்களிலோ ஒரு மரக்கன்று அல்லது செடியை நட்டு வைத்துவிட்டு ஓட்டுப் போடுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் அந்த கன்றை வளருங்கள். இறுதியில் நீங்கள் ஓட்டுப் போட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் உங்களுக்கு பலன் கொடுக்கவில்லை என்றாலும் நீங்க நட்டு வளர்த்த மரம் நிச்சயம் பலன் கொடுக்கும். அதனால் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு மரக்கன்றை நட்டுவிட்டு வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களியுங்கள் என்று அந்த பதிவுகள் செல்கிறது. 

 


    இது குறித்து சமூகவலைதளங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருபவர்களில் ஒருவரான யாதும் ஊரே யாவரும் கேளீர் அமைப்பை சேர்ந்த எடிசன் கூறும் போது.. நாட்டில் காடுகள், மரங்களின் பரப்பளவு குறைந்து கொண்டே வருவதால் வெப்பம் அதிகமாகவும், மழை குறைவாகவும் உள்ளது. அதனால் சராசரியாக பெய்ய வேண்டிய பருவமழை கூட நமக்கு கிடைக்கவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கிறது. விவசாயம் பொய்த்துப் போனது. இந்த நிலையில் மரங்கள் அதிகமாக உள்ள பகுதியில் கஜா புயல் தாக்கி ஒட்டு மொத்த மரங்களையும் அழித்துவிட்டு சென்றது. 

 


    அதனால் மீண்டும் மழை பெறவும் விவசாயம் செழிக்கவும் மரங்கள் அவசியம். அதனால் தான் மரக்கன்றுகளை நடவேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது தேர்தல் நடக்க உள்ளது. இந்திய முழுவதும் நடக்கும் தேர்தல். இந்த தேர்தலில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு மரக்கன்றை நட்டு வளர்த்தாலே ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் மரங்களை வளர்த்துவிடமுடியும். அதனால் தான் சமூகவலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளோம். இதில் இளைஞர்கள் ஆர்வத்தொடு அந்த தேர்தல் நாளுக்காக காத்திருக்கிறார்கள். நாங்கள் போடும் ஓட்டு எங்களுக்கு பலன் கொடுக்கவில்லை என்றாலும் நாங்கள் நடும் செடியும், மரமும் நிச்சயம் பலன் கொடுக்கும் என்றார்.
            

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.