Skip to main content

மொய் விருந்தில் கள்ளநோட்டுகள் கலப்பதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், நெடுவாசல், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களில் மொய்விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கீரமங்கலம், மேற்பனைக்காடு பகுதியில் கடந்த மாதம் மொய் விருந்துகள் தொடங்கி  நடந்து வருகிறது. ஆனால் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல் உள்ளிட்ட கிராமங்களில் ஆடி மாதம் மட்டுமே மொய் விருந்துகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முதல் வடகாடு பகுதியில் மொய் விருந்துகள் தொடங்கிவிட்டது.

c


    வடகாடு பகுதியில் மொய் விருந்துகளில் பலருக்கும்  ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மொய் வாங்குவார்கள். சிலர் ரூ. 5 முதல் ரூ. 8 கோடி வரை மொய் பணம் வாங்குவார்கள். அதனால் பணம் வாங்கவும், பணத்தை எண்ணி கட்டு போடவும் வங்கி அதிகாரிகளையும் அழைத்து வருவார்கள். மேலும் கடந்த ஆண்டு முதல் பணம் எண்ணும் இயந்திரங்களும் வாடகைக்கு எடுத்து வந்து பணம் எண்ணிய சம்பவங்களும் நடந்துள்ளது. 


இந்த நிலையில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மொய் செய்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பல நேரங்களில் கள்ளநோட்டுகள் மொய் பணத்துடன் கலந்துவிட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் சமையல் அறையில் வைக்கப்பட்டுள்ள அசைவ உணவுகளும் காணாமல் போவதாக கூறப்பட்டு வருகிறது. 


அதனால் இந்த ஆண்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் கலந்துவிடுவதை தடுக்கும் விதமாக மொய்விருந்து பந்தல் மற்றும் மேலும் உணவில் யாரும் மர்ம நபர்கள் கலப்படங்கள் செய்துவிடாமல் தடுக்க உணவு பாதுகாப்பு அறைகள், உணவு அறைகள் என்று 8 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  முதல் முறையாக வடகாட்டில் மொய்விருந்து பந்தலில் கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுத்தை நடமாட்டம்; கட்டுப்பாட்டு அறை அமைப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Leopard movement; Control room setup

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று முன்தினம் (02.04.2024) இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று (03.04.2024) விடுமுறை அளித்திருந்தார்.

இத்தகைய சூழலில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் உள்ள 7 பள்ளிகளுக்கு இன்று (04.04.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டிருந்தார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறையின் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார். 

Leopard movement; Control room setup

இந்நிலையில் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே சமயம் சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். 

Next Story

பட்டப்பகலில் நடந்த படுகொலை; சி.சி.டி.வி கேமராவில் பதிவான பகீர் காட்சி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Incident in maharashtra hotel and scene recorded on CCTV camera

மகாராஷ்டிரா மாநிலம், புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலை பகுதியில் பிரபலமான தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில், நேற்று (17-03-24) மதியம் 4 பேர் கொண்ட நண்பர்கள் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஹோட்டலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், டேபிளில் அமர்ந்திருந்த ஒரு நபரை நோக்கி சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த அவர், கீழே விழுந்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அங்கு அமர்ந்திருந்த மற்ற நபர்கள் அங்கிருந்து பதறி அடித்து ஓடினர். 

இந்த சம்பவம் அரங்கேறிய சிறிது நேரத்திலேயே, மேலும் 6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலில் நுழைந்து, துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய நபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதன் பின்னர், அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், பலத்த காயமடைந்த நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், அவினாஷ் என்பதும், அவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் என்பதும் தெரியவந்தது.

மேலும், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலில், நடந்த இந்த கொடூர படுகொலை, அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. அந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கொலை செய்த நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.