Skip to main content

அ.தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்; புதிய தமிழகம் எச்சரிக்கை!

Published on 06/10/2020 | Edited on 07/10/2020

 

thiruvarur

 

 

தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் உள்ள ஏழு உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, அனைவரையும் தேவேந்திர குல வேளாளர் என அரசாணை அறிவிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிராமங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் அந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்தவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கீழபாலத்தில் கூடிய புதிய தமிழகம் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பிறகு, திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் "தேவேந்திர குல வேளாளர் அரசாணை வழங்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு இதுவரையிலும் அரசாணை வழங்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் அ.தி.மு.கவிற்கு கிடைக்காது என எச்சரிக்கை விடுத்து முழக்கமிட்டனர். கோரிக்கை நிறைவேறாவிட்டால் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து தீவிரப்படுத்துவோம்" என்று தெரிவித்தனர்.

 

இப்போராட்டத்தால் மன்னார்குடியிலிருந்து திருச்சி, வேதாரண்யம், நாகப்பட்டினம், திருவாரூர் செல்லும் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.