உள்ளாட்சி தேர்தலுக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் தொடரப்பட்ட மனுவுக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997- ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி, 2011, 2014, 2016- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. அதுபோல, உள்ளாட்சி தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் அளித்த விண்ணப்பத்தை மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 3- ஆம் தேதி நிராகரித்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்து மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்க உத்தரவிடக்கோரி அக்கட்சியின் துணைத் தலைவரான எஸ்.செல்லதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, பிப்ரவரி 4- ஆம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.