Skip to main content

‘மனுவை பெட்டியில் போடு..’ அதிருப்தியில் மறியல் செய்த பா.ஜ.கவினர்

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

‘Put the petition in the box ..’ BJP members  dissatisfaction

 

தமிழகம் முழுவதும் பிரதம மந்திரி வேளாண் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தொகையை 4 மாதத்துக்கு ஒருமுறை 2 ஆயிரம் எனப் பிரித்து வழங்கிவருகிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்தில் விவசாயியாக இல்லாதவர்களை இணைத்து அவர்களுக்கும் நிதி தரப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திவருகிறது.

 

இந்தத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவேண்டுமென பா.ஜ.க நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர்களைச் சந்தித்து மனு அளித்தனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியைச் சந்தித்து மனு கொடுக்க பாஜகவினர் செப்டம்பர் 7ம் தேதி சென்றுள்ளனர். முதல்வர் வருகை நிகழ்ச்சி ஏற்பாட்டில் உள்ளதால் புகார் பெட்டியில் மனுவைப் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.கவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்கவரவில்லை.

 

புகார் மனுவை நேரில் வாங்க கலெக்டர் மறுக்கிறார் எனத் தலைமைக்குத் தகவல் கூறியுள்ளனர். தலைமையின் உத்தரவுப்படி செப்டம்பர் 8ம் தேதி காலை 50க்கும் அதிகமான பா.ஜ.க நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளனர். வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் நின்றது.

 

சாலை மறியலில் அமர்ந்த பா.ஜ.கவினர், ‘மனுவை வாங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டிக்கிறோம், நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு’ என கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து சமாதானம் பேசி மறியலைக் கைவிடச் செய்தனர். பின்னர் அவர்கள் தந்த மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களை அனுப்பிவைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.