Skip to main content

பட்டியல் போட்டு லஞ்சம் வசூல்! கிருஷ்ணகிரி கல்வி அலுவலக ஊழியர் கைது!!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
 Put the list and collect the bribe! Krishnagiri education office employee arrested

 

 

கிருஷ்ணகிரி அருகே, பணப்பலன்கள் தொடர்பான கோப்புகளை சரிபார்க்க பட்டியல் போட்டு லஞ்ச வேட்டையாடி வந்த வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஐடிஐ அருகே வசித்து வந்தவர் ராமையா. கெலமங்கலம் அருகே அனுசோனை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதையடுத்து, ராமையாவின் பணப்பலன்களைப் பெறுவதற்காக அவருடைய மகன் கிஷோர்குமார் (28), கெலமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். நீண்ட காலமாக அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இதனால் அவர், அந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜி (50) என்பவரை நேரில் சந்தித்து முறையிட்டார்.

 

அப்போது பாலாஜி, தனக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், உடனடியாக பணப்பலன்கள் பெற்றுத்தருவதற்கான வேலைகள் செய்து தரப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு பணம் தருவதாக அப்போது ஒப்புக்கொண்ட கிஷோர்குமார், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் அறிவுறுத்தலின்பேரில் ரசாயன பவுடர் தடப்பட்ட 5 ஆயிரம் ரூபாயை எடுத்துச்சென்று பாலாஜியிடம் ஆக. 12ம் தேதி கொடுத்தார். அந்தப் பணத்தை பாலாஜி கையில் வாங்கும்போது, அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

 Put the list and collect the bribe! Krishnagiri education office employee arrested


கெலமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலாஜி மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புப்பிரிவுக்கு தொடர்ந்து ஊழல் புகார்கள் சென்றன. தற்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் பெற்றுத்தருதல், வாரிசு வேலைக்கான கோப்புகளை தயார் செய்தல், மருத்துவ விடுப்பு ஆவணங்களை சரி செய்தல் என ஒவ்வொரு பணிக்கும் சேவைக்கட்டணம் போல் பட்டியல் போட்டு பாலாஜி லஞ்சம் வசூலித்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

 

லஞ்சப்பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு போகிறது? என்பது குறித்து விசாரித்தனர். இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி மாவட்ட சிறையில் நீடிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.